
இன்றைய தலைமுறையினர் சந்தித்து வரும் பெரிய பிரச்னை குழந்தையின்மையே. தமிழ்ச் சூழலில் குழந்தையின்மை என்பது சமூக மதிப்பீடுகளுடன் ஒப்பிடப்படுகிறது என்ற போதிலும், இது குறித்து மருத்துவத் துறையின் பங்களிப்பை அதிகமானேôர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
குழந்தையின்மை என்பது மருத்துவ சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்படக்கூடிய ஒரு குறைபாடே. இந்தக் குறைபாட்டால் தெற்காசியாவில் மட்டும் 30 சதவீதத்தினருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
குறைபாடு விகிதம் என்ன? இந்தக் குறைபாடு, 30 சதவீதம் பெண் தொடர்பான காரணங்கள்-30 சதவீதம் ஆண் சம்பந்தமான காரணங்கள்-30 சதவீதம் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான காரணங்கள்-10 சதவீதம் ஆணிலும், பெண்ணிலும் தென்படாத, ஆனால் பரிசோதனைகளின் மூலம் கண்டறியக்கூடிய காரணங்களால் உருவாகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களைப் பொருத்தவரை விந்து தொடர்பான சிக்கல்கள், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துதல், மதுப்பழக்கம், அதிக வெப்பமான சூழலில் பணியாற்றுதல், சர்க்கரை நோய், மரபு ரீதியான குறைபாடுகள் போன்றவற்றால்தான் குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆளாகின்றனர். பெண்களைப் பொருத்தவரை கர்ப்பப்பை, சினைப்பை, கருக் குழாய் அடைப்பு, பாலிஸிஸ்டிக் ஓவரி, ஃபைப்ராய்ட் கட்டிகள், கிருமித் தொற்று, மரபு ரீதியான குறைபாடுகள், உடல் பருமன் போன்ற காரணங்களால்தான் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் கரு முட்டை உற்பத்தி தொடர்பான பிரச்னைகளால்தான் 45 சதவீதத்துக்கும் மேலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் குறைபாட்டை நீக்கிவிட முடியும்.
மேற்கூறிய காரணங்களைவிட ஒவ்வாமை, அணுக் கதிர்வீச்சுகளின் தாக்கம், அதிக நேரம் மடிக் கணினியைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களாலும் இரு பாலருக்கும் குழந்தையின்மை ஏற்படலாம்.
வரப்பிரசாதம் எது தெரியுமா? இத்தகைய குழந்தையின்மை பிரச்னைக்கு செயற்கை முறை கருத்தரிப்பு (டெஸ்ட் டியூப் பேபி முறை) எனப்படும் சிகிச்சை வரப்பிரசாதமாக அமைகிறது. 35 வயதுக்குக் கீழுள்ள பெண்களுக்கு இந்தச் சிகிச்சை மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. 35 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 50 சதவீத பலனும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 40சதவீதத்தை விடக் குறைவான பலன்களும் கிடைத்து வருகின்றன.
எனவே, உரிய காலத்துக்குள் பெண்கள் இத்தகைய சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஆண்களைப் பொருத்தவரை இத்தகைய சிகிச்சையைப் பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது.
சிகிச்சை என்ன? இத்தகைய சிகிச்சைக்காக வரும் தம்பதிகளிடம் முதல்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டு, குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன. அவை கண்டறியப்பட்டவுடன், விந்து, முட்டை அணுக்கள் ஆகியவை மருந்துகளின் உதவியுடன் உருவாக்கப்படுகின்றன.
பின்னர், பெண்ணின் முட்டை வெளியே எடுக்கப்பட்டு, அதை ஆணின் விந்தணுவுடன் இணைய வைத்து, மீண்டும் அது பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படுகிறது.
இந்த சிகிச்சை மேற்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பின் அந்தப் பெண்மணி வீட்டுக்குத் திரும்பிவிடலாம். அதன் பின் இயற்கையான முறையில் பத்து மாதம் தாயின் வயிற்றில் கருக் குழந்தை வளர்க்கப்படுகிறது.
குழந்தையின் வளர்ச்சியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். அத்துடன் குழந்தையின் வளர்ச்சிக்காக வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. வேறு எந்தச் சிக்கலும் ஏற்படாமலிருந்தால் இதுவும் ஒரு இயற்கையான கர்ப்பம் போன்றதாகும்.
தாய்மை இறைவனின் வரப் பிரசாதம். பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. எனவே குழந்தையின்மை பெண்களின் மனதிற்கும்,உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
திருமணமாகி, ஒருவருடத்தில், அடிக்கடி உடலுறவு கொண்டும், கருத்தரிக்காமல் போனால், குழந்தையின்மை குறை என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. வைத்தியரிடம் போவது நல்லது.
குழந்தையின்மையும், ஆண்மை / பெண்மை குறைவும் ஒன்றல்ல. உடலுறவே மேற்கொள்ள முடியாத பாதிப்புகள் ஆண்மை / பெண்மை குறை எனப்படும். குழந்தையின்மை குறை ஆணிடமும் இருக்கலாம் இல்லை பெண்ணிடமும் இருக்கலாம்.
காரணங்கள் ( ஆண்)
• விந்து குறைபாடுகள், விந்து செல்லும் பாதை அடைப்பு, விபத்தினால் பிறப்புறுப்பில் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவி குறைபாடுகள்,பிறப்புறுக்களின் வளர்ச்சியின்மை இதர பொதுவான வியாதிகள்.
• விந்து அசாதாரணமாக, இயற்கைக்கு மாறாக இருப்பது, குறைந்த அளவே உற்பத்தியாவது அல்லது விந்துக்களே இல்லாமல் போவது அல்லது விந்து நகர முடியாமல், ஆணுறுப்பை அடையமுடியாமல் போவது.
• ஆணுறுப்புகளுக்கு ‘சூடு’ – வெப்பம்’ ஆகாது. உடல் வெப்பநிலையை விட ஆணுறுப்புகளில், உஷ்ணம் குறைவாக இருக்கும். அதிக வெப்ப பாதிப்புகள், விரைகள் பிறவியிலிருந்தே ‘கீழ் இறங்காமல் அடிவயிற்றிலேயே தங்கி விடுவது, பருத்துப் போய், புடைத்து போன இரத்தக் குழாய்கள், நாட்பட்ட ஜீரம் இவைகள் விரைகளின் சூட்டை அதிகரிக்கும்.
• ஹார்மோன் குறைபாடுகள் – அதுவும் அட்ரீனலின், பிட்யூடரி சுரப்பிகளின் கோளாறுகள் விந்துவை உற்பத்தியாவதை பாதிக்கும்.
• சுற்றுப்புற மாசுகள், ரசாயன நச்சுப்பொருட்கள் சேர்ந்த பொருட்கள் (டியோடரண்ட், ஷாம்பு, ஆஃடர்ஷேவ் லோஷன்) விந்துவை பாதிக்கின்றன.
• பிறவிக் கோளாறுகளால் ‘செக்ஸ் குரோமோசான்கள்’ விந்து உற்பத்தியில் குறைபாடை ஏற்படுத்தும்.
• ‘மம்ஸ் (விuனீஜீs) போன்ற நோய்கள்.
• ஸ்டீராய்ட் மருந்துகள் ஹார்மோன் அளவுகளை குறைத்து விந்து உற்பத்தியில் தலையிட்டு, பாதிப்பை ஏற்படுத்தும்.
• அபூர்வமாக விந்து முன்னே செல்லாமல், பின்னால், ‘ரிவர்ஸில்’ சென்று விடும். நீரிழிவு நோயாளிகளுக்கும், இடுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இது ஏற்படலாம்.
பரிசோதனைகள்
விந்துவை பரிசோதிப்பது முதல் செயல்பாடு.
பரிசோதனைகள் ‘நார்மலாக’ இருக்க வேண்டிய அளவுகள்
1) விந்து எண்ணிக்கை 2 கோடி, ஒரு மில்லி லிட்டரில்
2) நகரும் தன்மை 8 மில்லியன் (80 இலட்சம்) ஒரு மில்லிலிட்டரில் (60 சதவிகிதம் நகர வேண்டும்).
3) புறத்தோற்றம் 30 சதவிகிதமாவது உருவில் சரியாக இருக்க வேண்டும்.
4) அளவு 2 . 0 மி.லி. க்கு மேல் இருக்க வேண்டும்.
5) ஃப்ரூக்டோஸ் 300 மி.கி. (மில்லி லிட்டருக்கு)
பெண்களின் குறைபாடுகள்
• மாதவிடாய் பிரச்சனைகள். மாதம் ஒரு முறை “சினைமுட்டை” வெளியாகாமல் போவது. ‘ப்ரோஜிஸ்டெரோன்’ ஹார்மோன் சுரக்காமல் போவது.
• இந்த ஹார்மோன், மாதா மாதம் கருப்பை பையின் உட்படையை , கெட்டியாக்கும். முட்டையின் வரவை எதிர்நோக்கி இந்த வேலையை அது செய்கிறது. மூளை, பிட்யூட்டரிக்கு தேவையான “கோனாடோட்ரேபின்” என்ற ஊக்குவிக்கும் ஹார்மோனை அளிக்க முடியாமல் போனால், ‘முட்டை’ உற்பத்தியாகாது.
• கர்ப்பப்பையின் ‘வாய்’ பாகம் தொற்று நோயால் பாதிக்கப்படுவது அடைத்துக் கொள்வது, கர்ப்பப்பை இடம் மாறுவது. சோகை,போன்றவை.
• தைராயிடு, அட்ரீனலின் சுரப்பிகளின் கோளாறுகள், நீரிழிவு நோய், அதிக உடல் பருமன்.
• சீரான மாதவிடாய் இல்லாமை, மாதவிடாய் போது வலி, குறைந்த உதிரப்போக்கு, முட்டை கருப்பைக்கு வரும் பாதையில் அடைப்பு. இதனால் முட்டை கருப்பையை சேரமுடியாமல் போகும்.
• சாதாரணமாக பெண்களின் கருப்பையில் இருக்கும் சளி கெட்டியாகவே இருந்துவிடும். விந்துவால் உள்ளே பிரவேசிக்க முடியாது. தவிர தொற்றுநோய்க்காக கொடுக்கப்படும் ஆன்டி பயாடிக் மருந்துகள் விந்துவையும் நாசம் செய்து விடலாம்.
• பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புகளின், பிறவிக்கோளாறுகள் கருப்பப்பை, அதன் பாதைகள் இவற்றில் “கட்டி” ஏற்படுதல்.
இந்த குறைபாடுகளை கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆயுர்வேத முறைகள்
முதலில் உடல் கோளாறுகளை சரி செய்தபின், குழந்தை உண்டாகும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதன் பிறகு கருப்பையில் குழந்தை சரியாக வளர பிரத்யேக மருத்துவ கவனம் அளிக்கப்படும்.
ஷோதனா சிகிச்சை முறைகள்
1) ஸ்நேகபானம் – ‘ஸ்பெஷல்’ மூலிகை செறிந்த நெய் காலையில் கொடுக்கப்படும். குறைந்த அளவில் ஆரம்பித்து, மெதுவாக அதிக அளவுகளில் கொடுக்கப்படும்.
2) ஸ்வீதானம் – மருந்துகள் கலந்த நீராவி குளியல் செய்விக்கப்படும்.
3) விரேசனம் – உடலின் விஷங்களை வெளியேற்றும் சிகிச்சை
4) கஷாய வஸ்தி – பிரத்யேக மருந்துகளை ‘எனிமா’ கொடுக்கப்படும். இது நரம்புகளை திடப்படுத்தும்.
5) ஸ்நேக வஸ்தி – மருந்து கலந்த எண்ணைகள் கொடுக்கப்பட்டு பிறப்புறுப்பு – சிறுநீர் பாதைகளை சரிப்படுத்தப்படும்.
6) ஒட்டார வஸ்தி – கருப்பப்பை, ஜனனேந்திரியல்களை சுத்திகரித்து, எண்ணைப் பசையை உண்டாக்க, பிரத்யேக நெய் கொடுக்கப்படும்.
பிறகு சற்று ஓய்வுக்குப் பின் “வாஜீகர்ணம்” சிகிச்சையால் விந்துவின் குணம், தரம், அளவு இவற்றையெல்லாம் மேம்படுத்தி உடல்,ஆண்மை பலப்படுத்தப்படும்.
யோகாசனங்களை மேற்கொண்டால் முழுப்பலனை பெறலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் ( மீன்,வெண்மாமிசம், முட்டைகள்). வெங்காய சாற்றுடன், தேன் / நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.