சர்க்கரையை நோயை குறைக்கும் நித்தியகல்யாணி (CATHARANTHES ROSEUS)



 மேல் பகுதி முதல் அடிபகுதிவரை அனைத்தும் பயன்படுகின்ற ஒரு மூலிகை செடி! CATHARANTHES ROSEUS ,VINCO ROSEA. என்ற தாவரப்பெயரை தாங்கியுள்ள APOCYNACEAE குடும்பத்தில் பிறந்த சீமாட்டிதான் நித்தியகல்யாணி மூலிகை செடி! சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ,பெரிவீன்க்கில் மதுக்கரை, மறுக்கலங்காய் என இந்த கல்லரை பூக்களுக்கு செல்லப் புனைப்பெயர்கள் உண்டு! கனகலி என்று ஒருவகை! நிர்மல், தவாள் இவைகள் வெள்ளை ரகங்கள்!!

மருத்துவப் பயன்கள் -:

நித்தியக் கல்யாணி நாடி நடையைச் சமப்படுத்தவும்,சர்க்கரையை நோயை குறைக்கவும் , இரத்த அழுத்தம்,மனரீதியான நோய்கள், மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் என பல நோய்களை குணமடைய செய்யும் மருத்துவகுணம் இதில் உள்ளது. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் இது மிகவும் பயன் படுத்தப்படுகிறதாம். நித்தியக் கல்யாணியில் உள்ள 100ஆல்கலாய்டுகளும் மருந்துவ தண்மைகளை கொண்டது! அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். மேலும் இதில் உள்ள அஜ்மாலின் கூட முக்கியமானதுதான். ரவ்பேசின் (Raubasin)செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine) எல்லாம் மருந்தாக பல நோய்களுக்கு தீர்வாக சிறப்பித்துகொண்டிருக்கிறது. இது தவிர மருந்துசெடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்துதாராளமாக கிடைப்பதாலும் இப்பயிர் மருத்துவத் துறையின் வணிகத்தில் முக்கியத்துவம் அடைகிறது.

நித்தியகல்யாணியின் ஐந்தாறு பூவை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதிமூத்திரம், உடல் பலவீனம், மிகு பசி, பசியின்மை தீரும் என்றும்
வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை அளவுவை வெந்நீரில் 2, 3முறைகொடுக்கச் சிறுநீர்ச் சர்கரை குறையும் நோய் கட்டுப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

நித்தியகல்யணியின் பிறப்பிடம் மடகாஸ்கர் ஆக இருந்தாலும் இது இந்தோசீனா, இந்தோனேசியா, இஸ்ரேல்,பிலுப்பையின்ஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் வாழ்க்கைப்பட்டு குடித்தனம் செய்துகொண்டிருக்கிறது. நித்தியகல்யணி மிகவும் அட்ஜெஸ்டபில் டைப்! மணல் பாங்கான இடமாக இருந்தாலும் சரி , தரிசு நிலங்களாக இருந்தாலும் சரி இது அடுத்தவர்களின் உதவியை அதிகம் எதிர்பார்க்காமல் தானாக நன்றாக வளரும். களர், மற்றும் சதுப்பில்லாத எல்லா நிலங்களும் இதற்கு சம்மதமே. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம்,மேற்கு வங்காளம் குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆசையாக இவைகள் பயிரிடப்படுகிறது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் அழகிய கவர்ச்சியான ஐந்து இதழ்களுடன் அவை ஒன்றை ஒன்று லேசாக வருடிகொள்ளும் அமைப்புடன் உள்ள மலர்களும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இது 2 அல்லது 3 அடி கூட வளரும். இதன் இலை கசப்பாக இருப்பதால் கால்நடைகள் தீனியாக ஏற்றுக்கொள்வதில்லை. இது பூத்து குழுங்க கட்டுப்பாடு வைத்துக்கொள்வதில்லை. எல்லாப் பருவங்களிலும் மலர்களை அணிந்து அழகாக காட்சியளிக்கும்! அழகுத் தாவரமாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.


தற்பொழுது இதை வணிக ரீதியாகவும் பயிரிடுகிறார்கள். மணலுடன் விதைகளைக் கலந்து மானாவாரியாகவும்,இறவை சாகுபடியாகவும் விதைக்கிறார்கள். முறைப்படி செடி வளர்ந்து 6 வது,9 வது மற்றும் 12 வது மாதங்களில் இலைகளைப் பறித்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிறார்கள். பின் 12 வது மாதத்தில் தரைமட்டத்தில் செடியை அறுத்து விட்டு வேர்களை உழுது எடுத்துப் பதப்படுத்திவியாபாரத்திற்கு அனுப்புகிறார்கள். அமெரிக்கா அங்கேரிக்கு இலைகளையும், இதன் வேர்களை இத்தாலி, மேற்கு ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் என பல நாடுகளுக்கு முறையாக கடத்தப்படுகிறது.

Popular Posts