
"உண்மையாய்க் கருப்பாக வேம்புண்டாக்கி
உகந்துமே மண்டலம் தான் கொண்டாயானால்
வெண்மையாஞ் சரீரமது கருவண்டு போலாம்
மேனியில் ரோமமெல்லாம் நிமிர்ந்தெழும்பும்
தண்மையாய் சடந்தானும் கற்பாந்தகாலம்
சமாதியிலே யிருக்கலாந் தழுக்காய்க்காணும்
ஒண்மையா இருட்டறையி லிருந்தாயானால்
உதிக்கின்ற கதிர்போலே யிருக்கும்பாரே"
- போகர் -
கருவேம்பின் பட்டை, வேர் இவைகளை எடுத்து உலர்த்தி காய வைத்து, தூளாக்கி தினமும் மாலை வேளையில் ஒரு பலம் அளவு எடுத்து ஒருமண்டலத்திட்கு உண்டு வந்தால் உடம்பில் உதிர்ந்த ரோமமெல்லாம் சீராக மீண்டும் வளரும், இந்தக் கற்பம் உண்ணும் காலத்தில் சமாதியிலே இருக்கலாம் அது சிறப்பாகக் கைகூடும், இந்த கற்ப மருந்து உண்ணும் காலத்தில் இருட்டறையில் இருந்தால் உடம்பானது சூரியன் உதிக்கும் போது எப்படி இருக்குமோ அது போல ஒளி வீசும் என்கிறார் போகர்.
கருவேம்பின் பட்டை, வேர் இவைகளை எடுத்து உலர்த்தி காய வைத்து, தூளாக்கி தினமும் மாலை வேளையில் ஒரு பலம் அளவு எடுத்து ஒருமண்டலத்திட்கு உண்டு வந்தால் உடம்பில் உதிர்ந்த ரோமமெல்லாம் சீராக மீண்டும் வளரும், இந்தக் கற்பம் உண்ணும் காலத்தில் சமாதியிலே இருக்கலாம் அது சிறப்பாகக் கைகூடும், இந்த கற்ப மருந்து உண்ணும் காலத்தில் இருட்டறையில் இருந்தால் உடம்பானது சூரியன் உதிக்கும் போது எப்படி இருக்குமோ அது போல ஒளி வீசும் என்கிறார் போகர்.