"கண்டிலேன் கற்பூர வில்வந்தானும்
கடிந்தரைத்துப் பாக்களவு பாலிலுண்ணு
அண்டில்லா அக்கினியை தானவிக்கும்
அழுந்துகின்ற மேகமெல்லாம் சாடிப்போகும்
மண்டிலேன் வாதபித் தத்தை நீக்கும்
வாய்நீர்தான் மிகூறல் வற்றிப்போகும்
வெண்டில்லா மேனி சரசரப்புப்போகும்
மிக்கன வெள்ளெழுத்து மீறிடாதே"
- போகர் -
கற்பூர வில்வம் எனும் மூலிகையை எடுத்து நன்றாக அரைத்து பாக்களவு எடுத்து பாலுடன் சேர்த்து ஒருமண்டலம் மாலை வேளையில் உண்டால்.உடம்பிலுள்ள சூடு இல்லாது போவதுடன், வாதம் , பித்தங்களையும் போக்கி உமிழ் நீர் அதிகம் சுரப்பதும் நின்றுவிடும் அத்துடன் உடம்பிலுள்ள நோய்க்காரணிகள் அனைத்தும் இல்லாது போகும், ஆனால் பத்தியம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று போகர் சொல்கிறார்.