
ஆண்மைக் குறைவு என்பது பல காரணங்களால் உண்டாகிறது. இந்தக்குறை உடையவர்கள் செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால்ஆண்மைக் குறைவு நீங்கும்.
அதிக சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும்நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்துஅதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும்.
செண்பகப் பூ உடல் தேற்றுதல், முறைநோய் தீர்த்தல், உள்ளுர்ப்பு அலர்ச்சியைத் தணித்தல், வீக்கம் குறைத்தல், பசி, மாதவிடாய் ஆகியவற்றைத் தூண்டுதல், பூ சிறுநீர் பெருக்கி, வெள்ளை ஆண்மை குறைவு தீரும். பூவின் குடிநீரால் குன்மம் தீரும். பட்டை குடிநீர் முறை சுரத்தைப் போக்கும்.
செண்பக மரத்தின் இலையைக் கொண்டு வந்து இடித்து சாறு எடுத்துத் துணியில் வடிகட்டி, அதில் 3 தேக்கரண்டியளவும், இரண்டு தேக்கரண்டியளவு தேனும் சேர்த்துக் கொடுத்து வந்தால் எந்த வகையான வயிற்று வலியானாலும் அது குணமாகும்.
தேவையான அளவு செண்பக இலையைக் கொண்டுவந்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, இரண்டு தேக்கரண்டியளவு நெய்யை அதில் விட்டு காய்ந்தவுடன் இலையைப் போட்டு, நன்றாக அதாவது இலை மிருதுவாகும்படி வதக்கி உச்சியில் கனமாக வைத்துக் கட்டி வந்தால் மண்டைக் குத்து குணமாகும். காலை மாலை புதிய இலையை வதக்கிக் கட்ட வேண்டும். மூன்று நாளில் குணம் தெரியும்.
ஒன்பது செண்பகப் பூக்களை எடுத்து, உள்ளே சுத்தம் பார்த்து, பொடியாக நறுக்கி ஒரு சட்டியல் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, வடிகட்டி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால், சொட்டு மூத்திரம், நீர்சுருக்கு இவைகள் மூன்றே நாட்களில் குணமாகிவிடும்.
ஒரு வாயகன்ற சீசாவில் 150 கிராம் தேங்காயெண்ணையை விட்டு, அந்த எண்ணெய் மேல் மட்டம் வரை செண்பகப் பூவைக் கிள்ளிப் போட்டு, தினசரி வெய்யிலில் வைத்து எடுத்து அந்த எண்ணெயை வீக்கம், வாதவலி உள்ள இடத்தில் சூடுபறக்கத் தேய்த்து வெந்நீரைத் தாங்கும் அளவில் விட்டு உருவி விடவேண்டும். இந்த விதமாக காலை, மாலை செய்து வந்தால் வாத வலி, வீக்கம் குணமாகும்.
இரவு படுக்குமுன் ஒரு புதுசட்டியில் 30 செண்பகப்பூவை ஆய்ந்து போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளரும் மாலையில் ஒரு டம்ளருமாக இறுத்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள இரணம் கூட ஆறிவிடும்.
முறைக் காச்சலைக் குணப்படுத்த 10 கிராம் செண்பகமரத்துப் பட்டையை நைத்து ஒரு புது சட்டியல் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி, காலையில் அரை டம்ளரும், மாலையில் அரை டம்ளருமாக மூன்று நாட்கள் கொடுக்க முறைக்காச்சல் குணமாகும்.